பெண்களே அவதானம் ! பொறியியலாளர் எனத் தெரிவித்த நபர் 100 க்கு மேற்பட்ட பெண்களுக்கு செய்த செயல் !!


நுகேகொடை மிரிஹான பகுதியில் பொறியியலாளர் என தெரிவித்து பெண்களை ஏமாற்றி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

பொறியியலாளர் என தெரிவித்து சுமார் நூற்றுக்கும் அதிகமான பெண்களுடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார் என அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிம் அட்டையினை கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பெண்களை ஏமாற்றுவதற்காக அவர் பயன்படுத்திய மடிக்கணினி, கையடக்க தொலைபேசி மற்றும் மகிழுர்தி ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளதோடு, 50 ஆயிரம் ரூபாய் பணத்தினையும் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் குறித்த நபர் சாரதியாக பணிபுரிந்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.