மட்டக்களப்பில் செஞ்சோலை படு கொலையின் 12 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு


(சரவணன்)
செஞ்சோலை படு கொலையின் 12 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு மட்டக்களப்பில் இன்று (14.08.2018) செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது.

14.08.2006 அன்று முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது இலங்கை விமானப்படை நடாத்திய தாக்குதலில் 52 சிறுவர்கள் உட்பட 61 பேர் படு கொலை செய்யப்பட்டதுடன் 100 க்கு மேற்பட்ட சிறுவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நினைவு நாளையொட்டி மட்டக்களப்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரி.சுரேஸ் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜெகநீதன் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது சுடரேற்றப்பட்டு மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌனப்பிராத்தினையும் இடம் பெற்றது.

இதன் நினைவாக மட்டக்களப்பு கொடுவாமடுவிலுள்ள முன் பள்ளி பாடசாலையொன்;றின் ஆசிரியருக்கு நிதியன்பளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.