தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம்



தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன.

39 பாடசாலைகள் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளன. 6848 ஆசிரியர்கள் இதில் இணைந்து கொள்கின்றார்கள். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 21ஆம் திகதி முடிவடையவுள்ளன. இதனைத்தொடர்ந்து கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.