வாழைச்சேனை கிளை மக்கள் வங்கி புதிய முகாமையாளராக தர்மபாலன் தனசாகரன்


வாழைச்சேனை கிளை மக்கள் வங்கி முகாமையாளராக தர்மபாலன் தனசாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கு முகாமையாளராக கடமையாற்றிய திருமதி கிருசாந்தி சுதாகரன் மக்கள் வங்கி செங்கலடி கிளைக்கு முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறப்பிடத்தக்கது.

இதேவேளை வாழைச்சேனை மக்கள் வங்கியில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி கணினி மயப்படுத்தப்பட்ட சுயவங்கிச் சேவைப் பிரிவு நிலையம் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைத்திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் தங்களது வங்கிச் சேவையினை மேற்கொள்ளமுடியும் தெரிவிக்கப்படுகிறது.