கூடைப்பந்தாட்ட போட்டியில் புனித மிக்கேல் கல்லூரி சம்பியனானது


தேசிய ரீதியில் நடைபெறவுள்ள 15 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்குபெறும் பொருட்டு வடக்கு கிழக்கில் இருந்து அணியினை தெரிவு செய்வதற்கான தெரிவுப் போட்டி யாழ்ப்பாணத்தில் 10.08.2018 தொடக்கம் 13.08.2018 வரை நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு புனித மிக்கேல் கல்லூரி தெரிவாகி யாழ் மத்திய கல்லூரியை 64 - 38 என்ற கணக்கில் இலகுவாக வீழ்த்தி சம்பியனாகியது. 

இவ் அணியனை பகுதி நேர உடற்பயிற்சி ஆசிரியர் திரு.சந்துரு அவர்கள் வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.