கிழக்கு மாகாண ஆளுநரும், ஜப்பானின் இலங்கைக்கான தூதுவரும் சந்திப்பு


கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்கும் ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் KENICHI SUGANUMக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது கிழக்கு மாணத்திலுள்ள மக்களின் நல்லிணக்கம், இன ஒற்றுமை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் கிழக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

அத்துடன் கல்வி சுகாதாரம் போன்ற விடயங்களின் வளர்ச்சி, இதில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்திப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.