கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை

(ஏறாவூர் நிருபர் எஎம் றிகாஸ்)
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் அரையாண்டு பொலிஸ் பரிசோதனை பொலிஸ் நிலைய வளாகத்தில் நேற்று புதன்கிழமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ சமரகோன் தலைமையில் நடைபெற்றபோது மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.என்.மெண்டிஸ் அணிவகுப்பு மரியாதையினையும் ஏற்றுக் கொள்வதைப்படத்தில் காணலாம்.

இதன்போது ஆயுதங்களின் பராமரிப்பு, வாகனப் பயன்பாடு, பொலிஸாரின் சேம நலன்கள், குறித்தும் பரிசோதனை நடைபெற்றது.