கிழக்கில் தமிழர் பிரதேசங்களில் அதிகரிக்கும் குற்றச் செயல்கள் !!


(செ.துஜியந்தன்)
கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை ஒழிக்கும் பொருட்டு அம்பாறை விசேட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ்குழுவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபகாலமாக அம்பாறைமாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. கூடுதலாக கேரளா கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகியபிரதேசங்களில் கஞ்சாவிற்பனையில் ஈடுபட்ட சிலர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டும் இருந்தனர்.

இதேவேளை சட்டவிரோத சாராய விற்பனையிலும் பலர் ஈடுபட்டுவருகின்றனர். அதிகமாக அம்பாறைமாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் சட்டவிரோத மதுபான விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் குடும்பங்களில் பிணக்குகளும், சமூகவிரோதச் செயல்களும் இடம்பெற்றுவருவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா மற்றும் மதுபான விற்பனைகளில் ஈடுபவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்குமாறுகேட்டுள்ளனர். கிராமமட்டத்தில் பொலிஸாருடன் இணைந்து சிவில்பாதுகாப்புக்குழுவினரும் மற்றும் சமூக ஆர்வலர்களும் இணைந்து குற்றச்செயல்களை ஒழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.