மட்டக்களப்பு கடலில் சிக்கிய இராட்சத மீன்


சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதி மதிக்கத்தக்க மூவாயிரம் கிலோ கிறாம் எடையுடைய இராட்சத திருக்கை மீன் ஒன்று 10.08.2018 வெள்ளிக்கிழமை ஏறாவூர்- சவுக்கடி கடலில் மீனவ வலையில் சிக்கியுள்ளது.

கே. வைரமுத்து என்பவரது இழுவை வலையில் சிக்கிய இந்த மீனை கரைசேர்ப்பதில் மீனவர்கள் பெரும் சிரமப்பட்டனர்.

இந்த மீன் துண்டங்களாக வெட்டப்பட்டு தனியார் கம்பனியொன்றுக்கு விற்கப்பட்டது.

சமீப நாட்களில் அசாதாரண காலநிலையினால் மீன்கள் குறைவாக சிக்குகின்றபோதிலும் எதிர்பாராதவிதமாக இவ்வாறான இராட்சத மீன் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.