கோட்டை தொடரூந்து நிலையத்தில் தீவிர நிலை ! போக்குவரத்து அமைச்சின் முக்கிய அறிவித்தல் !


கொழும்பில் ரயில் சேவை பணி புறக்கணிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து போக்குவரத்து அமைச்சு, புதிய அறிவித்தலை விடுத்துள்ளது.

அந்தவகையில் பணி புறக்கணிப்பு காரணமாக, புகையிரத பருவ சீட்டு உள்ளவர்கள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பள பிரச்சினையை உட்பட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி, குறித்த பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக தற்போது கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் தூர பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள் போக்குவரத்து இன்மையால் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.