மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறப்பான சுகாதாரப்பணி செய்வதற்கு பணிப்பாளர் நியமிப்பு

(-க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் திருமதி.கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்கள் புதன்கிழமை(15.)சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்திய நிருவாக துறையில் சிரேஸ்டத்துவம் மிக்கவரான அவர் கடந்த ஏழு வருடங்களாக போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றி பின் இவ்வருடம்(2018)  திருகோணமலை மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளராக நியமனம் பெற்று புதன்கிழமை வரையும் அங்கு கடமையாற்றி வந்துள்ள நிலையிலேயே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வெற்றிடமாக காணப்பட்ட பணிப்பாளர் பதவிக்கே இவ்வாறு நியமிக்கப்பட்டார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் இப்றாலெப்பை அவர்கள் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.
பல சவால்கள் நிறைந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த பல வருடங்களாக பல குறைபாடுகளும், நோயாளர்கள் தொடர்பில் சில அதிருப்திகளும் நிர்வாகத்தில் சில முறைப்பாடுகளும் பலரால் தெரிவித்து வந்ததை காணமுடிந்தது.
தற்போது பதவியேற்றுள்ள புதிய பணிப்பாளர் இவ்வாறான விடயங்களை புதிய பணிப்பாளர் உத்வேகத்துடனும்,தூரநோக்குச் சிந்தனையுடனும் காத்திரமான சுகாதாரப்பணியை மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்களின் நன்மைகருதி செய்து காட்டுவார் என்பதில் எவ்வித ஐயம் இல்லை.இதேவேளை இவ்வைத்தியசாலையில் மேலும் 2 பிரதிப்பணிப்பாளர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடமாக காணப்டுகின்றது.