வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை நிவாரணம் – 1 300 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு


 வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் நிவாரணம் வழங்கப்படவுள்ளது
அரசாங்கம் மொத்தமாக ஆயிரத்து 352 கோடி ரூபாவை ஒதுக்கியதென
அமைச்சர் துமிந்த திஸநாயக்க தெரிவித்தார். இது இலங்கையின் வரலாற்றில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசொன்று ஒதுக்கிய ஆகக்கூடுதலான தொகையென அமைச்சர் கூறினார். அவர் தமது அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார்.

வறட்சியான காலநிலையால் ஒரு இலட்சத்து 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நாளை தொடக்கம் நிவாரணம் வழங்;கப்படும். இதற்காக மேலும் 70 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.