(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு சிறைச்சாலை கட்டிட கூரை மீது ஏறி கைதி ஒருவர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்
மட்டக்களப்பு சிறைச்சாலை கட்டிட கூரை மீது ஏறி கைதி ஒருவர் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி இன்று வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்
திருகோணலையைச் சேர்ந்த 21 வயதுடைய யோகராசா லஷசன் என்ற கைதி வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பலாத்தகாரம் செய்தமை மற்றும் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சம்பவங்களுடன் கைது செய்யப்பட்டு அவருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த கைதி தன்னை பிணையில் விடுவிக்கவேண்டும் என கோரி சம்பவதினமான இன்று மாலை 4 மணியளவில் சிறைச்சாலை கூரை மீது ஏறி தன்னை தானே காயப்படுத்திய நிலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்
இதனையடுத்து அவரைகூரையில் இருந்து பாதுகாப்பாக இறக்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிசார் ஈடுபட்டுவருகின்றனர்
இதனையடுத்து அவரைகூரையில் இருந்து பாதுகாப்பாக இறக்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிசார் ஈடுபட்டுவருகின்றனர்