சத்துருக்கொண்டான் படுகொலையின் 28ம் ஆண்டு நினைவு தினம்




1990.09.09. அன்று சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி, கொக்குவில் போன்ற கிராமங்களிலிருந்து காடயர்களால் படுகொலை செய்யப்பட்ட 186 தமிழர்களின் 28 ஆவது நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை பி.ப 5.30 மணியளவில் அன்னாரது உறவினர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேஷன் மற்றும் மாநகர முதல்வர் சரவணபவன் ,மாநகர உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.