300 இற்கு மேற்பட்ட நோயாளர்கள் கலந்துகொண்ட இலவச மருத்துவ முகாம் - வைத்தியர்; தர்சனன் அவர்களின் ஏற்பாட்டில்



(சா.நடனசபேசன்)
வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் உள்ள திக்கோடைக் கிராம மக்களின் நன்மை கருதி  வைத்தியர் சக்திவேல் தர்சனன் அவர்களின் ஏற்பாட்டில்  இலவச மருத்துவ முகாம் இன்று  16 ஆம்திகதி  ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

திக்கோடை பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் காலை 9 மணி முதல் 4 மணி வரை இலவசமாக  இவ் மருத்துவமுகாம் .நடைபெற்றதுஇதில் 300 இற்கு மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்

இந்த மருத்துவமுகாம் மருத்துவப்பிரதிநிதி நண்பர்களின் பங்களிப்புடனும் களுவாஞ்சிக்குடி செல்வா பாமசியின் அனுசரணையுடனும் நடாத்தப்பட்டதுடன் இதற்கு பல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் வைத்தியர் நன்றி தெரிவித்துள்ளார் அத்தோடு இவ்வாறான மருத்துவமுகாம் நடாத்துவதற்கு இக்குள்ள மக்களின் உதவி தேவைப்படும் எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்