அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் உட்பட 90 பேர் கைது !!


(கனகராசா சரவணன்)
நீர் கொழும்பு வென்னப்புவ கடல்பகுதியில் இருந்து ரீயூனியன் தீவுக்கு சட்ட விரோதமாக படகு மூலம் செல்ல முற்பட்ட பெண் ஒருவர் உட்பட 90 இலங்கையர்களை நீர்கொழும்பு மேற்கு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (11) கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை கொழும்பு ரங்கல கடற்படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டதுடன் இதில் மட்டக்களப்பு .தொடவாவ. உடப்பு ,அம்பாறை, மன்னார் , சிலாபம், மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இதில் 66 தமிழாகள். 22 சிங்களவர்கள். 2 முஸ்லீம் உட்பட 90 பேர் படகில் பயணம் செய்துள்ளனர்

இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்காக தலா 3 இலச்சம் ரூபா பணம் முகவர் ஒருவரிடம் வழங்கியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்களை நாளை புதன்கிழமை கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை ரீயூனியன் தீவு என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சுத் தீவு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.