வௌிநாடு சென்று வருவோருக்கு ஓர் முக்கிய அறிவித்தல்


வெளிநாடுகளில் இருந்து, தாவரங்கள், விலங்குகள், இறைச்சி மற்றும் பழங்களை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்நாட்டுக்கு கொண்டு வரும் போது , அவரை கொள்வனவு செய்த நாட்டில் அது தொடர்பில் பெற்றுக்கொண்ட தௌிவாக்கல் சான்றிதழ் அத்தியாவசியப்படுத்தப் பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

தௌிவாக்கல் சான்றிதழ் இன்று கொண்டுவரப்படும் அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு , அவை அழிக்கப்படும் எனவும் சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.

இலங்கை மக்களை வௌிநாட்டு கிருமிகள் , நோய்கள் மற்றும் இலங்கை பயிர்களை வௌிநாட்டு பூஞ்சைகளில் இருந்து பாதுகாப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.