கொழும்பு – மட்டக்களப்பு தொடரூந்து போக்குவரத்து வழமைக்கு



யானை கூட்டம் தொடரூந்தில் மோதியதால் மட்டப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு தொடரூந்து வீதியின் போக்கவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

தண்டவாளத்தில் திருத்தப்பணிகள் இடம்பெற்றாலும், தொடரூந்து போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லை என தொரூந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

நேற்று அதிகாலை ஹபரணை மற்றும் பலுகஸ்வெவவிற்கும் இடையே கொலன்னாவையில் இருந்து பயணித்த எரிபொருள் எற்றிய தொடரூந்தில் சில யானைகள் மோதுண்ட நிலையில், தொடரூந்து தடம்புரண்டமை குறிப்பிடத்தக்கது.