செங்கலடியில் சடலம் மீட்பு ! இயற்கை மரணமா அல்லது கொலையா விசாரணைகள் ஆரம்பம்.!


ஏறாவூர் செங்கலடி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

48 வயதுடைய செங்கலடி 01, கணபதி கிராமத்தைச் சேர்ந்த கந்தலிங்கம் உதயகுமார் என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக தன் மனைவியையும் பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்து தனது தாயுடன் வாழ்ந்து வந்த இவர் ஒரு கட்டிடத் தொழிலாளி என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு குறித்த நபர் இயற்கையாக மரணம் அடைந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளரா என்பது தொடர்பில் ஆய்வு நடத்துகின்றனர்.

உடற்கூறாய்வுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.