மத்தியமுகாம் நகரில் டயர் களஞ்சியசாலை தீப விபத்து !!


(எம்.எம்.ஜபீர்)
மத்தியமுகாம் நகரில் மீள் சுழற்சிக்காக பயன்படுத்துவதற்காக டயர் துண்டுகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த களஞ்சியசாலையில் நேரற்று இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அக்களஞ்சியசாலை முற்றாக சேதமடைந்துள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்.

தீ ஏனைய பிரதேசங்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்தும் பொருட்டு கல்முனை மாநகர சபை மற்றும் அம்பாரை நகர சபை தீ அணைப்பு படையினர் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து தீயை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் (21) காலை தீ மீண்டும் எரிய ஆரம்பித்ததை தொடர்ந்து மத்தியமுகாம் பொலிஸார் தீயை அணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இதுவரைக்கும் தீ விபத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை எனினும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.