தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரி தேசிய மட்டத்திற்கு தெரிவு! மாணவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு.

- செங்கலடி நிருபர் -
ஆங்கில தினப்போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவான தன்னாமுனை  புனித ஜோசப் கல்லூரி மாணவர்கள்  தமது பாடசாலையில் கௌரவிக்கப்பட்டனர்.   மாகாண மட்ட ஆங்கிலத்தினப் போட்டியில் ஆங்கில நாடகத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு இவர்கள் தெரிவாகியுள்ளனர். இதேவேளை  தெரிவாகிய 12 மாணவர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் திரு.எம்.பற்றிக் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு முகாமைத்துவப்பிரிவின் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ்.ரமீஸ், ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.கே.பாலசுப்ரமணியம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் (ஆங்கிலம்) திரு.செ.சந்திரகுமார், கிழக்குபல்கலைக்கழக ஆங்கில மொழித்துறை தலைவர் திரு.என்.கெனடி ஆகியோர் பங்கேற்றனர்.