(சித்தா)
பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து இவ்வருடம் க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான மாபெரும் இலவசக் கல்விக் கருத்தரங்கு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆர்.சுகிர்தராஜன் தலைமையில் பிரபல சட்டத்தரணி திரு.வி.தேவசேனாதிபதி அவர்களின் அனுசரனையுடன் களுதாவளை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. றோஸ்சரிற்றி நிறுவனம் இணைந்து நடாத்திய இக் கருத்தரங்கில் 1000 மாணவர்கள் பங்குபற்றினர். கொழும்பு 13 இனைச் சேர்ந்த 'Arul study circle' வளவாளர்கள் கணிதம், விஞ்ஞானம், தமிழ், வரலாறு ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்கை நடத்தினார்கள். மிகவும் பெறுமதிமிக்க கருத்தரங்கு தொடர்பான இரண்டு புத்தகங்கள் சகல மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.
மேற்படி கருத்தரங்கினை பட்டிருப்பு கல்வி வலயத்தில் ஏற்பாடு செய்த சட்டத்தரணி திரு.வி. தேவசேனாதிபதி, றோஸ் சரிற்றி நிறுவனம் மற்றும் வளவாளர்களுக்கும் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் நன்றினையும் தெரிவித்து இதே போன்று எதிர்காலங்களிலும் பட்டிருப்பு கல்வி வலய மாணவர்களுக்கு உதவ முன்வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இக் கருத்தரங்கில் பட்டிருப்பு கல்வி வலய கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ஜெ.பிரியதர்சன், பட்டிருப்பு கல்வி வலய விஞ்ஞானப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.ரி.நடேசமூர்த்தி, பட்டிருப்பு கல்வி வலய விஞ்ஞானப் பிரிவிற்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு.சி.உதயசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.