க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்


க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன.
இந்தப் பரீட்சைகள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்தார்.

ஏதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான செயல் முறைப் பரீட்சைகளை அடுத்த மாதம் 3ஆம் வாரத்தில் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை நடைபெறுவதற்கு முன்னர் அதற்கான செயல் முறைப் பரீட்சைகள் நடைபெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சாதாரணப் தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகள் அதற்குப் பின்னரான செயல் முறைப் பரீட்சையில் ஆர்வம் காட்டுவதில்லை. அதன் காரணமாக செயல் முறைப் பரீட்சைகளை முன்கூட்டியே நடத்துவதென தீர்மானித்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.