கோட்டைமுனை ஸ்ரீ விரகத்திப் பிள்ளையார் அலய பூங்காவனத் திருவிழா


(சிவம்)

கோட்டைமுனை அருள்மிகு ஸ்ரீ விரகத்திப் பிள்ளையார் அலய வருடாந்த மஹோற்சவத்தின் 11 ஆம் நாள் பூங்காவனத் திருவிழா இன்று மாலை (14) நடைபெற்றது.

திருவிழாக் கிரியைகளை ஆலய பிரதம குரு நவரெத்தின முரசொலி மாறக் குருக்கள் நிகழ்த்தினார். திருவிழாவின்போது மாணவர்களின் இறைவனை துதி செய்யும் நாட்டிய நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆலய பிரதம குரு நவரெத்தின முரசொலி மாறக் குருக்கள் , தாமரைக்கேணி மகா மாரியம்மன் ஆலய பூசகர் சக்திதாசன், திருவிழாக்களின் உபயகாரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கௌரவிக்கப்பட்டனர்.

நேற்று வியாழக்கிழமை (13) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 ஆம் நாள் தீர்த்தோற்சவம் ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் தீர்த்தக் குளத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.