இலவச மருத்துவ முகாம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக - வைத்தியர்; தர்சனன் தெரிவித்தார்



(சா.நடனசபேசன்)
வெல்லாவெளி பிரதேச செயலகப்பிரிவில் உள்ள திக்கோடைக் கிராம மக்களின் நன்மை கருதி  வைத்தியர் சக்திவேல் தர்சனன் அவர்களின் ஏற்பாட்டில்  இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற இருந்தது இது தற்காலியமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருப்பதாக வைத்தியர் சக்திவேல் தர்சனன் தெரிவித்துள்ளார்.

திக்கோடை பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் காலை 9 மணி முதல் 4 மணி வரை இலவசமாக  இவ் மருத்துவமுகாம் நடாத்தப்பட இருக்கின்றது.

இந்த மருத்துவமுகாம் மருத்துவப்பிரதிநிதி நண்பர்களின் பங்களிப்புடனும் களுவாஞ்சிக்குடி செல்வாப் பாமசியின் அனுசரணையுடனும் நடாத்தப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது