கிழக்கின் சில பகுதிகளில் நீர் வெட்டு !



திருகோணமலை நகரம் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிமுதல் நாளைமறுதினம் சனிக்கிழமை 6.00 மணிவரை இரு தினங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படும் என திருகோணமலை நீர்வழங்கல் வடிகாலமைப்புச் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் கிண்ணியா, திருகோணமலை நகரம், பட்டினமும் சூழலும், பாலைபற்று, தம்பலகாமம், ஆண்டான்குளம், சாம்பால்தீவு முதல் இரக்கண்டி வரை நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.

பிரதான நீர்வழங்கல் பாதையில் இடம்பெறவிருக்கும் திருத்த பணிகள் காரணமாகவே நீர் விநியோகத்தில் தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக சபையின் திருகோணமலை அலுவலக பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.