களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலை புனித நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடல்


( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

இனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடியில்  இப்பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரிய ஆசிரிகைகளும் , கல்வி சாரா உத்தியோஸ்தர்களும் இணைந்து புனித நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.

பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இப்பாடசாலையில் கற்பிக்கும் இந்து , இஸ்லாமிய , கிருஸ்தவ , கத்தோலிக்க மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் கல்வி சாரா உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.