புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மாகாண மட்ட ஆங்கிலத்தினப் போட்டியில் முதலாமிடம்



(வரதன்)
கடந்த சனிக்கிழமை 08.09.2018 அன்று நடைபெற்ற மாகாண மட்ட ஆங்கிலத்தினப் போட்டியின் போது நாடகப்போட்டியில் கலந்துகொண்ட பாடசாலைகளில் மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் வித்தியாலயம் முதலாம் இடத்தையும் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

முடிவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் பெயரில் மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியின் பின் முடிவுகள் மீள் பரீசிலனை செய்யப்பட்டு புள்ளிகளின் அடிப்படையில் இரு பாடசாலைகளும் முடிவில் சமநிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் தேசிய மட்டத்தில் ஒரு பாடசாலை மட்டுமே பங்குபெற முடியும் என்பதனால்; ஏதேனும் ஒரு பாடசாலையைத் தெரிவுசெய்வதற்கான போட்டிகள் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.