மட்டக்களப்பு மாநகரசபையினால் நடாத்தப்படும். புகைப்படக் கண்காட்சி

தேசிய வாசிப்பு மாதம் மற்றும் வருமான சேகரிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால், நடாத்தப்படும். புகைப்படக் கண்காட்சியானது நேற்று  (19.10.2018) காந்திபூங்கா மூன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரின் அழகையும், கடந்த கால வரலாற்று பதிவுகளையும் மட்டக்களப்பு மண்ணின் புகைப்பட கலைஞர்களின் திறமைகளின் ஊடாக உலகறியச் செய்யும் நோக்கோடு இந்த புகைப்படக் கண்காட்சி அமைந்துள்ளது.


மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கா. சித்திரவேல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்மியசீலன், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், மாநகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள், உல்லாசப்பிரயாணிகள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாநகர சபை இணைந்து நடாத்தும் இந்த புகைப்படக் கண்காட்சியானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது