தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்.

 (ஞானச்செல்வன் )

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வை உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று (21) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள்,பொது அமைப்புகள் இணைந்து காந்தி பூங்கா முன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பைக் கோரி ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், சுலோகங்களையும் கறுப்புக் கொடிகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர்.

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டும் சம்பள உயர்வு கோரி போராட்டங்கள் அதிகரித்துள்ளன. 2015 ஆம் ஆண்டு முன்வைத்த ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கையைத்தான் 2018 ஆம் ஆண்டும் முன்வைத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் அவர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றது    ..