வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி


திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, ஹொரவபொத்தான பிரதான வீதி மயிலகுடாவெவ பகுதியில் நேற்று இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

திரியாய் பகுதியில் இருந்து வேகமாக வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டி வீதி ஓரத்தில் காணப்பட்ட மண்குவியல் உடன் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 42 வயதான ஆர்.எம்.விஜேசிங்க என்பவரும், 38 வயதான அவரது மனைவி பாக்கியாவும் மற்றும் இவர்களது மகளான 19 வயதான செவ்வந்தி ஆகியோரே இவ்விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான கணவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாயும் மகளும் விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்..