மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனம் நடாத்திய பாராட்டு விழாவில் கலைஞர்களுக்குக் கௌரவம்


ஸ்ரீ விஸ்வகர்ம ஜயந்தயை முன்னிட்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்களுக்கான பாராட்டு விழா அரசடி மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விஸ்வகர்ம சம்மேளனம் நடாத்திய இந்நிகழ்வு அதன் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினருமான சிவம் பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்

சங்கீத ஆசிரியை சாந்தினி தர்மநாதனுக்கு 'காந்தார ஞானமயி', நடனக் கலைஞர் மோகனப்பிரியன் தவராஜாவிற்கு 'நர்த்தன சிகாமணி', மிருதங்க வித்துவான் இரா நித்தியானந்தனுக்கு ' சர்மவாத்திய ஜோதி' மற்றும் கவிஞர் பாண்டியூர் பொன் நவநீதனுக்கு 'பொன் பாவேந்தன்' எனும் பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.