நவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பு


(ஞானச்செல்வன்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய மாணவர்களை நவராத்திரி விழா கொண்டாட தடை விதித்தமையை கண்டித்து இன்று தாதிய கல்லூரி மாணவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் வைத்தியசாலை பணிப்பாளருடன் கலந்ததுரையாடி சுகாதார அமைச்சின் அலுவலகத்தை தொடர்புகொண்டு போதனாசிரியரை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போதனாசிரியரை மட்டக்களப்பு போலீசார் அழைத்து சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது.