படுவான்கரை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் முகமாக விளையாட்டு உபகரணங்க வழங்கிவைப்பு- ஞா.ஸ்ரீநேசன்


[மயூ.ஆமலை]  மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை விளையாட்டு வீரர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களுடைய பன்முகப்படுத்தப்பட்ட நிதியினூடாக இந்த விளையாட்டுஉபகரணங்கள்வழங்கிவைக்கப்பட்டது.கரவெட்டி,மங்கிக்கட்டு, கன்னன்குடா, நரிப்புல்தோட்டம், ராஜா விளாவெட்டுவான் போன்ற பல கழகங்களுக்கு இதில் உள்ளடங்குகின்றது.  

அங்கு கருத்து தெரிவித்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் படுவான்கரை பிரதேசத்தில் பல விளையாட்டு வீரர்கள் இலைமறை, காய்களாக இருக்கின்றார்கள். இவர்களை வெளிக்கொணரவேண்டும். இவர்களுடைய திறமைகள் தேசியரீதியில் பேசப்பட வேண்டும். வெறுமனே நாம் வாழ்ந்ததாக இருக்கக்கூடாது வாழ்ந்ததற்கு ஒரு அடையாளம் இருக்க வேண்டும். எனவும்

அத்தோடு இந்த விளையாட்டு உபகரங்களின் மூலம் அனைவரும் பயனடைய வேண்டும் இது வெறுமனே காட்சிக்கு வைக்கும் பொருளாக அமைந்து விடக்கூடாது. ஆகையால் இது பயன் படுத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.