நிந்தவூர் அல் அஸ்றஹ் தேசியபாடசாலைக்கு நூல்கள கையளிக்கப்பட்டது.


(சா.நடனசபேசன்)
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கலாசார அலுவல்கள் திணைக்களமும் அம்பாரை மாவட்ட செயலகத்தினதும் அனுசரனையுடன் நிந்தவூர் பிரதேசசெயலக கலாசாரப் பிரிவின் ஒழுங்கமைப்பில் பிரதேச கலைஞர்களதும் வெளிப்பிரதேச கலைஞர்களதும் ஒரு தொகை நூல்கள் நிந்தவூர் அல்அஸ்றக் தேசியபாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை (19 ஆம் திகதி) அம்பாரை மாவட்ட செயலகத்தின் மேலதிக செயலாளர் க.விமலநாதன் தலைமையில் அல் அஸ்றத் தேசியபாடசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டது.

இதில் பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்சார்,பாடசாலையின் அதிபர்,பிரதிஅதிபர்கள், மாவட்டகலாசார உத்தியோகத்தர் ரி.எம்.றின்சான்,பிரதேசகாலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் க.சுதர்சன் உட்பட பலர்கலந்துகொண்டனர் .