தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பிலான செயலமர்வு



தகவலறியும் உரிமைச்சட்டம் தொடர்பிலான மட்டக்களப்பு மாவட்ட அமரா,சமாச வலையமைப்பு பெண்களுக்கான செயலமர்வு  வியாழக்கிழமை மட்டக்களப்பு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தில் இடம்பெற்றது.

இதனை விழுது நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. வளவாளராக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் சமூக அணிதிரட்டுனர் யோ.ஜெயதர்சன் கலந்து கொண்டார்.

தகவலுக்கான உரிமைச் சட்டம் எனப்படுவது பொது அதிகார சபையிலுள்ள, தமது தனிப்பட்ட தேவையுடன் தொடர்பற்ற தகவல்களையும் குடிமக்கள் பெறுவதனை அனுமதிக்கும் ஒரு உரிமையாகும். இச்சட்டமூம் தொர்பான நடமுறைகள், சட்ட ஏற்பாடுகள் என்பன இச்செயமர்வில் பங்குபற்றுனர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டதோடு இச்சட்டத்தினைப் பயன்படுத்தி மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய பொதுமக்கள் நலன்சார்  விடயங்கள்  என்பனவும்  பங்குபற்றுனர்களினால் அடயாளப்படுத்தப்பட்டது.