அகில இலங்கை தமிழ்மொழி தின விருது வழங்கும் விழா




அகில இலங்கை தமிழ்மொழி தின விருது வழங்கும் விழா எதிர்வரும் 27 ஆம் திகதி மாத்தளையில் நடைபெறவுள்ளது. 
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மாத்தளை இந்து தேசிய கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற தமிழ்மொழி தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.