மட்டக்களப்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்களின் திருவுருவச் சிலை அமைப்பு நடவடிக்கைகள் மட்டக்களப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்று வருகின்றன. மட்டக்களப்பு பேருந்து நிலைய சந்தியில் வாவிக்கரை வீதி 01ல் இத் திருவுருவச் சிலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமைக்கப்படுகின்ற இத் திருவுருவச் சிலையானது எதிர்வரும் 2018.10.15ம் திகதி திங்கட்கிழமை மாலை 02.30 மணியளவில் திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தந்தை செல்வா சிலை நிர்மானிப்புக் குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தை செல்வாவின் சிலை திறப்பு நிகழ்விற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைமைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சிக் கிளைகளின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4