பெரியநீலாவணையில் வற்ச் அமைப்பின் ஏற்பாட்டில் இலவச வகுப்பு ஆரம்பம்.


(சா.நடனசபேசன்)

பெரிய நீலாவணை 1வி தொடர்மாடியில் லண்டன்; வற்ச் அமைப்பின்  அனுசரணையில் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் வகுப்புக்கள் அங்குரார்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை 19 ஆம்திகதி  வற்ச் அமைப்பின் மட்டக்களப்புக் கிளையின்; தலைவர்; ஓய்வுபெற்ற கணக்காளர் பொ.முத்துலிங்கம் தலைமையில் தொடர்மாடியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட செயலக மேலதிக செயலாளர் க.விமலநாதன். விசேட அதிதிகளாக கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான எஸ்.குபேரன்,எஸ்.சந்திரசேகரம்,உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் ,லண்டன் சாள்ஸ், அரங்கம் பத்திரிகையின் பத்திராதிபதி பூ.சீவகன்,அரங்கம் பத்திரிகையின் பணிப்பாளர் திருமதி பரமேஸ்வரி சீவகன் கல்முனை மாணவர் மீட்புப்பேரவையின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ்.வற்ச் அமைப்பின் செயலாளர் ஓய்வுபெற்ற வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி   ஓய்வுபெற்ற பொறியியலாளர் பி.தணிகாசலம், பொறியியலாளர் வி.ஈ.ஏ.ஜெயக்குமார் உதவிக்கல்விப்பணிப்பாளர் எம். தயானந்தம்,ஓய்வுபெற்ற வலயக்கல்விப்பணிப்பாளர் கே.சத்தியநாதன் உட்பட பலர் கலந்துசிறப்பித்தனர்