தயாளனின் இரு நூல்களின் அறிமுக விழா



லண்டனில் வசிக்கும் கரவை மு. தயாளனின் இரு நூல்களின் அறிமுக நிகழ்வு மட்டகளப்பு நூலக கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சைவ புரவலர் வீ.றஞ்சிதமூர்த்தி  அவர்களின் தலைமையில் 14. 10. 2018 ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள் பிரதம அதிதியாகவும் பேராசிரியர் செ.யோகராஜா அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் மைக்கல் கொலின் வரவேற்புரையினையும் கா கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் ச. மணிசேகரன் வெளியீட்டுனரயினை வழங்கினர். அறிமுகம் செய்யப்பட்ட நூல்களிலொன்றான தயாளனின் குறும்பாக்கள் என்ற நூலினை கவிஞர் பாலமுனை பாறூக் வழங்கினார். மற்றொரு நூலான புளியமரம் சிறுகதைத் தொகுப்புக்கான அறிமுகத்தினை கவிஞர் மேரா வழங்கினார்.

நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரு நூல்களும் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்வின் இறுதியில் எழுத்தாளர் மு.தயாளன் அவர்கள் ஏற்புரையினையும் நன்றியுரையினை வழங்கினார். கவிஞர் ஜீ.எழில்வண்ணன் தொகுத்து வழங்கினார்.