மரக்கறி விலை மீண்டும் அதிகரிப்பு



மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளத
நாட்டில் நிலவிய மழையுடனான வானிலையால், அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சுமார் 60 வீத மரக்கறிகள் மழையினால் அழிவடைந்துள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மேலும் கூறியுள்ளது.

தக்காளி, கறிமிளகாய், லீக்ஸ் உள்ளிட்ட சில மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.