லிற்றோ நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலையேற்ற கோரிக்கை! அரசாங்கத்தினால் நிராகரிப்பு


சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு லிற்றோ காஸ் நிறுவனம் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.தற்போதைய சூழ்நிலையில் இதற்கான சாத்தியம் இல்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக  அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளhர்.

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர்லக்ஷ்மன்கிரியெல்லமற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கிடையில், கைத்தொழில் மற்றும்வர்த்தக அமைச்சில் நேற்றுக் காலை (18) இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.. 

 சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டுமென வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டார். உலக சந்தையில்,பெற்றோலிய பொருட்களின் விலை மாறுபட்ட வகையில், அடிக்கடி அதிகரித்தாலும் ,அரசாங்கம் எரிவாயு உட்பட நுகர்வுப் பொருட்களின் விலையை அதிகரிக்க இடமளிக்கமாட்டாது எனவும் அமைச்சர்  குறிப்பிட்டார்.