உலக முஸ்லிம் லீக்கின் அதியுயர் சபைக் கூட்டம் இன்று வியாழக்கிழமை மக்கா நகரில் ஆரம்பமானது. இதில் தெற்காசிய பிரதிநிதியாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்றுள்ளார்.
உலகலாவிய ரீதியில் இயங்கும் பலம் வாய்ந்த அமைப்பான உலக முஸ்லிம் லீக் (ராபிததுல் ஆலம் அல் இஸ்லாமி) அமைப்பின் தெற்காசிய பிரதிநிதியாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார்.