இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறையைச் சேர்ந்த 37 வயதுடைய இஸ்மாயில் என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து அம்பாறையை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதியில் குறுக்கே வந்த மாட்டுடன் மோதி வீதியின் அருகிலுள்ள கால்வாயினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாறை தலைமையக பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.