மட்டக்களப்பு கோட்டைமுனை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மானம்பூ ஊர்வலம்


(சிவம்)

மட்டக்களப்பு கோட்டைமுனை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்த நவராத்திரி விழாவையொட்டிய மானம்பூ ஊர்வலம் இன்று (19) மாலை நகர விதிகள் வளியே நடைபெற்றது.

முப்பெருந் தேவிகளுக்கு முறையே துர்க்கா, லக்ஷ;மி மற்றும் சரஸ்வதி 9 நாட்கள் வசந்த மண்டபத்தில் அலங்கார பூஜைகள் நடைபெற்று 10 ஆம் நாள் விஜயதசமி இன்று (19) இடம்பெற்றது.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பா.சிவலோகேஸ்வரக் குருக்கள தலைமையில் பயனியர் விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 5.00 மணிக்கு அம்பாளின் வாழைவெட்டு நடைபெற்ற பின்பு அம்பாள் முத்துச்சப்பரத்திலே ஆரோகணித்து வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தாள்.

நகர வீதிகளில் அடியார்கள் மங்கலப் பொருட்களால் அலங்கரித்து பூரண கும்பம் வைத்து அம்பாளை வரவேற்று ஸ்ரீ மகா மாரியம்பாளின் இஷ;ட சித்திகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.