மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் நடாத்தும் விஷேட ஊக்குவிப்பும் பாராட்டும்




(சசி)
மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி சங்கத்தால் (EDS) கல்வியில் சிகரம் தொட்ட மாணவர்களையும், சாதனை படைத்த போதனையாளர்களையும்  ஊக்குவிக்கும் நிகழ்வு - 2018  கல்லடி, நொச்சிமுனை EDS சிவநேசராசா மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 13.10.2018. பி.ப 4:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது.

கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் ஸ்தாபகர் திரு எஸ். தேவசிங்கன் அவர்கள் தலைமையில் நடைபெறும் இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் திரு . தி. சரவணபவன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.