மட்டக்களப்பு - பூநொச்சிமுனை பகுதியில் மூன்று லட்சம் ரூபா பெறுமதியான மதன மோகனம் எனும் போதை லேகியத்துடன் 40 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த பிரபாத் கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார் .
இன்று மாலை சந்தேக நபரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் லேகிய பைக்கற்றுகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன .