படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்தவரை காணவில்லை

மீன்பிடிக்காக, வாகரைப் பிரதேசத்தையொட்டிய, வங்காளக் கடலில், படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்த மீனவரை, இன்று (09) காணவில்லையென, வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், வாகரை - புளியங்கண்டலடி கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இரவிச்சந்திரன் (வயது 37) என்ற, மூன்று பிள்ளைகளின் தந்தையே காணாமற்போயுள்ளார்.

இதுபற்றி பிரதேச மீனவர்களால் அறிவிக்கப்பட்டமையைத் தொடர்ந்து, தேடுதல் இடம்பெற்று வருவதுடன், சம்பவம் பற்றி வாகரைப் பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.