புலவர்மணி அவர்களின் 40வது நினைவுதின நிகழ்வுகள் நாளை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில்


புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் 40வது நினைவுதினத்தை முன்னிட்டு நினைவுப் பேருரையும் 'புகழ்பூத்த புலவர்மணி' நூல் வெளியீடும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நாளை (03.112018) மு.ப 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கலாநிதி சி.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் கலந்து சிறப்பிக்கவுள்ளார். நினைவுப் பேருரையினை கவிக்கோ. வெல்லவூர் கோபால் அவர்களும் நூல் அறிமுகவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.வாமனும் நிகழ்த்தவுள்ளனர்.

இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணிமன்றத்தினர்