நாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவையின் சமூக சேவை செயற்பாடுகள்




நாவற்காடு அக்னிச் சிறகுகள் பேரவையால்  கடந்த மாதம்  மேற்கொள்ளப்பட்ட சமூக சேவை செயற்பாடுகளில்  சில.
 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு கையையும் மறு கையில் 4 விரல்களையும் இழந்த வறுமையில் வாழும் கரவெட்டி நெல்லுச்சேனையை சேர்ந்த 38 வயதுடைய  ஒருவரின்    குடும்பத்திற்கும் மற்றும்
வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஈச்சந்தீவு கிராமத்தில் மிக வறுமைக்கோட்டில் வாழும் கணவனை இளந்த ஒரு பெண் பிள்ளையோடு வாழும்   தாய்க்கு   8500 ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய உலர் உணவு பொதியானது கடந்த  24.10.2018 அன்றும் வழங்கி வைக்கப்பட்டதுடன்.


மேலும்  வவுணதீவு பிரதேசத்தின் ஈச்சந்தீவு, விளாவெட்டுவான் கிராமத்தின் மிக வறுமைக்கோட்டில் வாழும் தந்தையை இளந்த  பிள்ளைகளுக்கு  தேவையான பாடசாலை கற்றல்  உபகரணங்கள்  4.11.2017 அன்று  விளாவெட்டுவான் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வடிவேல் திலீபன் அவர்களின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.